தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் ரம்பா முக்கிய நடிகையாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கிறார்.
பின் கனடா நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் பத்மனாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார். அவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளது. பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் சில காலம் ரம்பாவும் அவரது இருவரும் பிரிந்து வாழ்ந்தார்கள். நீதிமன்றம் வரை இவர்களின் வழக்கு சென்றது. பின் ரம்பா சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார்.
பின் இருவரும் இணைந்தார்கள். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் தகவல் வெளியானது. இந்த தகவலை அவரே உறுதி செய்துள்ளார்.விரைவில் மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாக போகிறாராம் ரம்பா.