பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பப்பட்ட மோசமான வீடியோ: கொந்தளித்த மக்கள்!!

628

ஐரோப்பிய நாடான Riga வில் அமைந்துள்ள அருங்காட்சியத்தில் ஓவியர் ஒருவர் இரண்டு பேரை நிற்கவைத்து அவர்களின் தசைகளை வெட்டி சமைத்த காட்சியை பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Arturs Bērziņš என்ற அந்த கலைஞர், தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பியதாவது, அருங்காட்சியத்தில் இரண்டு பேரை அவர்களின் கைகளை கட்டி நிற்கவைத்துவிட்டு, கத்தியை எடுத்து அவர்களின் உடலில் இருந்து தசையை வெட்டி எடுக்கிறார்.

அதன்பின்னர், அந்த தசையை ஒரு வாணலியில் வைத்து வறுத்து எடுக்கிறார். இவரது இந்த காட்சி பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து, இவருக்கு எதிராக புகார்களையும் அளித்துள்ளனர்.