போதைப் பொருளுக்காக தெருவில் பிச்சையெடுத்த நடிகர்!!

717

சர்ச்சைகளின் மன்னனான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படம் நாளை வெளியாகிறது.சஞ்சு என்ற பெயரில் வெளியாகும் இந்த படத்தில் ரன்பிர் கபூர் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் காட்சியில், சஞ்சய் தத் 308 பெண்களுடன் தூங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையான சஞ்சய் தத், இதற்காக தெருவில் பிச்சையெடுத்ததும், குப்பை பொறுக்கியதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கூறிய ரன்பீர் கபூர், போதைப்பொருளுக்கு அடிமையானதால் சஞ்சய் தத் மறுவாழ்வு மையத்தில் அனுமதிப்பட்டார்.ஆனால் அங்கிருந்து தப்பியோடி தெருவில் பிச்சை எடுத்துள்ளார், விற்பனையாளர்களிடம் கெஞ்சியுள்ளார்.

சுமார் 12 நாட்கள் கழித்து நண்பன் வீட்டுக்கு சென்று, அவரிடம் பணம் வாங்கி போதைப்பொருள் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் மிகவும் கஷ்டப்பட்டே சஞ்சய் தத் அந்த பழக்கத்திலிருந்து மீண்டும் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.