போலீஸ் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

306

உத்தரபிரதேசம்….

உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சரோஜ்.

இவரது கணவன் தர்மேந்தர். இவர் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகன் உள்ளார். இந்த சூழலில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மகன் நேற்றிரவு டியூசன் சென்றிருந்தபோது தர்மேந்தர்-சரோஜ் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில்,

வீட்டில் இருந்த கட்டையால் மனைவி சரோஜை தர்மேந்தர் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து தர்மேந்தரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். டியூசன் சென்ற மகன் வீட்டின் கதவை தட்டியபோதும் பெற்றோர் திறக்காததால் அருகில் உள்ள உறவினர் வீட்டில் இரவு தங்கியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை வீட்டிற்கு சென்று மீண்டும் கதவை தட்டியுள்ளான். அப்போதும் கதவை பெற்றோர் திறக்காததால் வீட்டுக்கு வெளியே நின்று அழுதுள்ளான்.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சரோஜ் ரத்த வெள்ளத்திலும், தர்மேந்தரன் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்