மனைவி சொன்ன ஒரு வார்த்தை : ஆத்திரத்தில் அம்மிக்கல்லை தூக்கிபோட்டுக் கொன்ற கணவன்!!

653

மது குடிப்பதைத் தட்டிக்கேட்ட மனைவியை அம்மிக்கல்லால் கொலை செய்த கணவனைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர். இவர் மனைவி முபாரக் பேகம். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அப்துல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியோடு தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு அப்துல் வீட்டுக்கு வந்த நிலையில், அதை முபாரக் தட்டி கேட்டதோடு இனி குடிக்கக்கூடாது என சண்டையிட்டுள்ளார். பிறகு, முபாரக் பேகம் தூங்கச் சென்ற நிலையில் அப்துல் ஜாபர் தூங்காமல் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இதையடுத்து நள்ளிரவில், தூங்கிக்கொண்டிருந்த முபாரக் பேகம் தலையில் அப்துல் அம்மிக்கல்லைத் தூக்கிப் போட அவர் தலைநசுங்கி இறந்தார்.

பின்னர் அப்துல் தப்பியோடியுள்ளார், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முபராக் பேகம் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் முபாரகின் சடலத்தை கைப்பற்றியதோடு தலைமறைவாக இருந்த அப்துலை கைது செய்தனர்.

குடிக்காதே என சொன்னதால் மனைவியை கொன்றதாக பொலிசில் அப்துல் வாக்குமூலம் அளித்துள்ளார்.