மன உளைச்சலில் இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

245

விருதுநகர்….

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்நெல்குடி  கிராமத்தில் ஈஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார்.

இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.