மருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகளை கொல்ல முயன்ற நர்ஸ்: வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

770

பிரேசில் நாட்டில் மருத்துவமனை ஒன்றில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை நர்ஸ் ஒருவர் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கமெரா காட்சிகளை பரிசோதித்த நிர்வாகம் பொலிசாரின் உதவியை நாடி அந்த செவிலியரை கைது செய்துள்ளனர்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இங்கு நர்ஸாக பணி புரிந்து வந்த 41 வயது Simone Anjos dos Santos என்பவர் சம்பவத்தன்று இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை அணுகி அவர்களின் கழிவுகளை வெளியேற்ற பொருத்தப்பட்டுள்ள குழாய்களை அகற்றியுள்ளார்.

இந்த நிலையில் வேறொரு நர்ஸ் அந்த அறையில் பாதுகாக்கப்படும் குழந்தைகளை பரிசோதித்த போது, குறித்த சம்பவத்தை கண்டுபிடித்து புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் குறித்த நர்சை கைது செய்துள்ளனர்.ஆனால் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்த நர்ஸ் மீது தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சான்டோசின் இந்த நடவடிக்கையால் 4 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் சான்டோஸ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஜனவரி 14 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை 4 குழந்தைகள் மீது குறித்த நர்ஸ் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொள்ள பொலிசார் முடிவு செய்துள்ளனர்.மட்டுமின்றி குழந்தைகளை குறிவைக்கும் நோக்கம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

குறித்த சம்பவம் வெளியானதை அடுத்து மருத்துவமனையில் இருந்து நர்ஸ் சான்டோசை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர்.