மருத்துவர்களால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

996

கர்நாடக மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவரின் அலட்சியத்தால் ஒன்பது மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக, உடுப்பியைச் சேர்ந்த ஸ்ருதி ஸ்வர்ணா (23). இவரது கணவர் பெயர் சந்தீப். இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். ஒன்பது மாதமான கர்ப்பிணியான ஸ்ருதி உடுப்பியில் உள்ள சய்யா என்ற மருத்துவரின் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு ஆரம்பத்தில் வலி நிவாரண ஊசி போடப்பட்டதை தொடர்ந்து. பின்பு பிரசவ அறையில் அனுமதிக்கப்பட்டு. பிரசவம் பார்க்கும்போது குழந்தை பாதியிலேயே சிக்கிக் கொண்டதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்துள்ளனர் மருத்துவர்கள்.

இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது தவறுதலாக பிரதான ரத்தக்குழாயை வெட்டியதால் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அனுபவமில்லாத குறித்த பெண் மருத்துவர் சய்யாவினால் ரத்த இழப்பை தடுத்து நிறுத்த இயலாத நிலையில் ஸ்ருதி உடனே மரணமடைந்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் அம் மருத்துவமனையில் நடப்பது இது நான்காவது முறையாம். இதுவரை நடந்த சம்பவங்களுக்கு அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசவத்திற்கு அனுமதித்த ஒன்பது மாத கர்ப்பிணி பெண் இவ்வாறு மரணமடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.