மறைந்த நடிகரின் மகளா இது! முழு குடும்பமும் மகிழ்ச்சியின் உச்சத்தில்.. ரசிகர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி?

715

மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் அசத்தலான வேடங்கள் நடித்து மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கலாபவன் மணி.இவர் 2016ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் திகதி உயிரிழந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வழக்குகள் இன்று வரையும் இடம்பெற்று வருகிறது.

இந்த நேரத்தில் கலாபவன் மணியின் மகள் ஸ்ரீலக்ஷ்மியின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.இது குறித்து, கலாபவன் மணியின் அண்ணன் தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மணிக்கு அவரது மகளை மிகவும் பிடிக்கும். 10ஆம் வகுப்பில் அவள் நிறைய மதிப்பெண் எடுத்ததால் காரை பரிசாக கொடுத்தார்.இப்போது ஸ்ரீலஷ்மி 12ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார். மகளை ஒரு மருத்துவராக ஆக்க வேண்டும் என்பது அவரது ஆசை, மருத்துவமனை கட்டவும் ஆசைப்பட்டார்.

இப்போது அவரது மகள் 10, 12 படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார். மணியை போல் ஸ்ரீலக்ஷமியும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டு வளரவேண்டும் என்று வாழ்த்துவதாக பதிவு செய்துள்ளார்.

அது மட்டும் இல்லை, மணியின் மகள் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளதால் முழு குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதேவேளை, குட்டி பெண்ணாக இருந்த மணியின் மகள் தற்போது நன்றாக வளர்ந்து விட்டதால் குறித்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அது மட்டும் இல்லை, சில ரசிகர்கள் இரண்டு வருடங்களில் இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாரா என்று பேரதிர்ச்சியடைந்துள்ளார்.