முதல் முறையாக 5 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட 3D பிரிண்ட் வீடு; மாத வாடைகை மட்டும் எவ்வளவு தெரியுமா?

428

நெதர்லாந்தில்…

முதல் முறையாக 5 நாட்களில் 3டி பிரிண்ட் வீட்டை கட்டிய சம்பவம் ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளது.

ஐரோப்பா கண்டத்துள்ள நெதர்லாந்தில் நித்தோவன் என்ற பகுதியில் இந்த வீட்டை கட்டியுள்ளனர். வெறும் ஐந்து நாட்களில் பொறியியல் வல்லுனர்களால் இந்த வீட்டை கட்டி முடித்து அசத்தியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், இந்த வீட்டை வேறு எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் மிக எளிதில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கேற்ற வசதிகள் இந்த வீட்டின் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவின் முதல் 3D பிரிண்ட் வீட்டில் வயதான தம்பதியினர் தற்போது வாடகைக்கு சென்றுள்ளனர்.

இந்த வீட்டின் மாத வாடகை ரூபாய் 72 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடு குறித்த தகவல்கள் தற்போது உலகம் முழுவதும் அதிகமாக பரவி வருகிறது..