விஜய்யை பார்த்து பயந்து நடுங்கிய முன்னணி நடிகர், போனிலேயே இப்படியா!

568

விஜய் மிகவும் எளிமையானவர், அமைதியானவர். யாரிடமும் சத்தம் போட்டு கூட படப்பிடிப்பில் பேச மாட்டார்.இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வில்லு என்ற படம் திரைக்கு வந்தது, அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்துக்கொண்டார்.

அப்போது ஒரு ஸ்பெஷல் போன் கால் உங்களுக்கு வந்துள்ளது என கூற, விஜய் பேச ஆரம்பித்தார். அப்போது முதல் வார்த்தையே போனில் ‘அண்ணா நடுங்கிட்டு இருக்கேண்ணா’ என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

அந்த போனில் வந்தது வேறு யாருமில்லை தனுஷ் தான், வில்லு படத்துடன் தான் தனுஷின் படிக்காதவன் படமும் திரைக்கு வந்தது.உங்கள் படம் வருவதால் பயத்தில் உள்ளேன் என தனுஷ் கூற, விஜய் உடனே ‘அட வாங்க, அதெல்லாம் ஒரு பயமும் இல்லை’ என்று கூலாக பேசினார்.