வெளிநாட்டில் மனைவியை கொன்று புதைத்து கேரளாவுக்கு தப்பிய கணவன்: அதிர்ச்சி சம்பவம்!!

543

சார்ஜாவில் மனைவியை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்துவிட்டு கேரளாவுக்கு தப்பி சென்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சகோதரியை தேடி சார்ஜாவுக்கு சென்ற நிலையில் சகோதரியின் வீடு பூட்டப்பட்டிருந்தது.

கதவில் வீடு வாடகைக்கு என எழுதப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சார்ஜா பொலிசில் புகாரளித்துள்ளார்.புகாரில், சார்ஜாவில் வசிக்கும் தனது சகோதரியிடம் தினமும் போனில் பேசும் நிலையில் சில நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அவரது கணவரும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்து சார்ஜாவுக்கு வந்ததாக கூறியிருந்தார்.இதையடுத்து பொலிசார் பெண்ணின் வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்த போது வீட்டு தரையில் சில டைல்ஸ் கற்கள் காணாமல் போயிருந்தது.

இதையடுத்து பொலிசார் அங்கு தோண்டி பார்த்த போது ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடைத்தது, அது தனது சகோதரியின் சடலம் தான் என அந்த நபர் அடைபாளம் காட்டியுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கொல்லப்பட்ட 36 வயதுடைய பெண்ணின் கணவருக்கு இன்னொரு மனைவியும் இருந்துள்ளார்.இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொல்ல முடிவெடுத்த கணவர் தனது இன்னொரு மனைவி மற்றும் குழந்தைகளை கேரளாவுக்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் 36 வயதான மனைவியை கொன்று வீட்டுக்குள் புதைத்து விட்டு கேரளாவுக்கு தப்பியோடியுள்ளார்.கொலையாளியை பிடிக்க சர்வதேச பொலிசார் உதவியை நாடியுள்ளோம் என கூறியுள்ளனர்.