12 வயது சிறுவனால் கர்ப்பமான கன்னியாஸ்திரி: 62 வருடங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்!

1021

இங்கிலாந்தில் கன்னியாஸ்திரி ஒருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நபர் சுமார் 62 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகளை சந்தித்துள்ளார்.

இங்கிலாந்தின் லான்காஷிர் பகுதியில் கத்தோலிக்க தேவாலயத்தால் நடத்தப்படும் ஜான் ரேனால்ட்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் எட்வர்ட் ஹயேஸ்.

1950 ஆம் ஆண்டு இவர், 12 வயது சிறுவனாக இருந்தபோது இல்லத்தில் இருந்த மேரி கான்லெத் என்ற கன்னியாஸ்திரியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக கன்னியாஸ்திரி கர்ப்பமானார். இப்படி கன்னியாஸ்திரியாக இருந்துகொண்டு வாழ்க்கையில் ஒழுக்கமற்று நடந்துகொண்ட காரணத்தால் அவர், இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கர்ப்பமான கன்னியாஸ்திரிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் கழித்து எட்வர்டை சந்திக்க கன்னியாஸ்திரி இங்கிலாந்து செல்ல முயற்சித்துள்ளார்.

ஆனால், அது தோல்வியில் முடிந்ததால், தனது சொந்த நாடான அயர்லாந்திலேயே செட்டில் ஆகிவிட்டார். பின்னர் திருமணம் செய்து கொண்ட கன்னியாஸ்திரி நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த அவர் 2002-ம் ஆண்டு மரணமடைந்தார்.

காலங்கள் கடந்து சென்றது. 76 வயதை எட்டியுள்ள எட்வர்ட், கன்னியாஸ்திரி மூலம் பிறந்த தனது மகளை தற்போது சந்தித்து சந்தோஷம் அடைந்துள்ளார்.

மகளுக்கு 62 வயதாகியுள்ளது. மகளுடனான சந்திப்பு குறித்து எட்வர்ட் கூறியதாவது, எனது மகளை முதல்முறையாக சந்திக்கும்போது எனக்குள் பதட்டம் இருந்தது.

எனது மகள் என்னைப்போன்றே நகைச்சுவை உணர்வு கொண்டவளாக இருக்கிறாள். அவளை சந்தித்ததில் அளவற்ற மகிழ்ச்சி என கூறியுள்ளார்.