13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட 42 வயதான நபர்

863

இந்தியாவில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண்டுக்கு மேலாக அவரை துன்புறுத்தி வந்த 42 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.புதுடெல்லியை சேர்ந்த 42 வயதான நபர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.இவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் முதல் மனைவி இறந்துவிட, இரண்டாவது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஆட்டோ ஓட்டுனர் பீகாருக்கு சென்ற போது ஒரு ஏழ்மையான குடும்பத்தை சந்தித்துள்ளார்.அந்த குடும்பத்தின் தலைவர் இறந்துவிட்ட நிலையில் தாய் தனது 13 வயது மகளுடன் வசித்து வந்தார்.தாயிடம் சென்று பேசிய ஆட்டோ ஓட்டுனர், அவரின் மகளை தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவளை வசதியாக வைத்து காப்பாற்றுவேன் எனவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய தாய், ஆட்டோ ஓட்டுனருக்கு சிறுமியான தனது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.பின்னர் டெல்லிக்கு சிறுமியை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனர் தினமும் சிறுமியை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதோடு, வீட்டு வேலைகள் பலவற்றை செய்ய சொல்லி அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சிறுமி தினமும் இரவில் அழும் சத்தத்தை கேட்ட அவர் வீட்டருகில் வசிக்கும் நபர் சமீபத்தில் இது குறித்து சிறுவர்கள் உதவி மையத்துக்கு போன் செய்து கூறியுள்ளார்.இதையடுத்து பொலிசார் உதவியுடன் சம்பவ இடத்துக்கு வந்த மைய அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து அவரை கொடுமைப்படுத்தி வந்த ஆட்டோ ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளனர்.மேலும், இதில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டுள்ளார்களா என்றும் விசாரித்தும் வருகிறார்கள்.