15 சிறுமிக்கு பூசாரி செய்த மோசமான செயல்: சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவு..!

457

மாசாணமுத்து…..

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த மாசாணமுத்து அங்குள்ள சுடலை மாடன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.

கோவிலுக்கு வரும் 35 வயது பெண் ஒருவர் தன் குடும்ப கஷ்டம், உடல்நிலை பாதிப்பு குறித்து கூறி பரிகாரம் கேட்டுள்ளார். இதற்கு, ராமேசுவரம் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என பூசாரி கூறியுள்ளார்.

இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி, அந்தப் பெண் தனது 15 வயது மகளையும் அழைத்துக்கொண்டு பூசாரியுடன் ராமேஸ்வரத்துக்கு சென்றுள்ளார். அங்கு விடுதியில் தங்கியிருக்கின்றனர்.

அப்போது, பூஜை செய்ய வேண்டுமென்று கூறி தனி அறையில் வைத்து மாசாணமுத்து சிறுமியை பா.லி.யல் வ.ன்.கொ.டுமை செய்துள்ளார்.

இது குறித்து தாய் அளித்த புகாரில், ராமேசுவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்ட பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்து மாசாணமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா, பூசாரி மாசாணமுத்துவை சாகும்வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதோடு ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.