2 மகள்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

370

கேரள….

கேரள மாநிலம் ஆலப்புழை அருகே உள்ள கிழக்கே புரி பகுதியை சேர்ந்தவர்கள் சசிதரன், பிரசன்னா (54) தம்பதி. இவர்களுக்கு சசிகலா (34), மீனு (31) என 2 மகள் இருந்தனர்.

இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாக சசிதரன் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் கணவரின் சிகிச்சைக்கும்,குடும்பத்தை நடத்துவதற்கும் பிரசன்னா கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்தநிலையில் கடனை கொடுத்தவர்கள் அந்தப் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை பிரசன்னா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் தன்னுடைய உடலில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெயை ஊற்றியதோடு மகள்களான மீனு, சசிகலா மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனால் அவர்கள் 3 பேரும் அலறினார்கள். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடோடி வந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டனர்.

எனினும் 3 பேரும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து அறிந்ததும் ஆலப்புழை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று,

மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.