4 வயது சிறுவன் மீது கல்லை எறிய வைத்த கொடூர ஆசிரியை: கதறி அழுத பரிதாபம்!

620

அமெரிக்காவில் விதிமுறைகளை மீறியதாக கூறி, நான்கு வயது சிறுவன் மீது மற்ற மாணவர்களை வைத்து கல்லை வீச செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Arkansas பகுதியின் Forrest சிட்டியில் அமைந்திருக்கும் ஒரு நர்சரி பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் திகதி ஆசிரியர் ஒருவர் விதிமுறைகளை மீறியதாக கூறி, அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காக, மற்ற மாணவர்களை வைத்து தண்டனை கொடுத்துள்ளார்.

அதாவது அந்த நான்கு வயது சிறுவனை பள்ளியில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் நிற்க வைத்துவிட்டு, அதன் பின் 6 மாணவர்களையும் குறித்த மாணவன் மீது கல்லை விட்டு எரியும் படி கூறுகிறார்.

ஆசியருக்கு பயந்து அந்த மாணவர்களும் குறித்த மாணவன் மீது கல்லை வீசுகின்றனர். அப்போது கல்லானது சிறுவனின் முழங்காலில் பட்டதால், வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார்.

இதைக் கண்ட அந்த ஆசிரியர் இது உனக்கு ஒரு பாடம் என்று கூறுகிறார். இந்த காட்சியை மற்றொரு ஆசிரியர் வீடியோவாக எடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவரை கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.