4 பிள்ளைகளையும் கோடாரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தை!!

767

மனைவி வெளியே சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த 4 பிள்ளைகளையும் கோடரியால் சரமாரியாகத் தாக்கிக் கொன்றார் தந்தை. மனதைப் பதைபதைக்க வைக்கும் இந்த கொடூரத் தாக்குதலில் அலி ஷான் (14), நாடியா (10), இஷா (9) மற்றும் ஐமென் (8) ஆகிய 4 பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் சாரா- ஆலம்கிர் பகுதியின் அருகேயுள்ள காம்பி மேரா கிராமத்தில் நடந்தது.

பிள்ளைகளின் கதறல் ஓசையை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்து வீட்டினர் தந்தையான முஹம்மது அயூபைப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.