9 மனைவிகளில்… நீ எனக்கு 7 வது மனைவி : தில்லாக கூறிய கணவனுக்கு நேர்ந்த கதி!!

766

லக்னோவில் பல பெண்களை ஏமாற்றி எனது கணவர் 9 பெண்களை திருமணம் செய்துகொண்டார் என மனைவி புகார் அளித்ததையடுத்து பொலிசார் டேவிட் தவானை கைது செய்துள்ளனர்.

டேவிட் தவான் தொழிலதிபர் ஆவார். இவர் தனது மனைவி சமீராவிடம், நான் 9 பெண்களை திருமணம் செய்துகொண்டேன், அதில் நீ எனக்கு 7 வது மனைவி என கூறியுள்ளார்.

இதனை கேட்ட சமீராவுக்கு தனது கணவரின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தவானுக்கு அடிக்கடி, நேகா என்ற பெண்ணிடம் இருந்து போன் வருவதை கண்டறிந்துள்ளார். மேலும், இவரது கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு அதிக முறை பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நேகாவை தொடர்பு கொண்டு சமீரா பேசிய பின்னர் தான் தெரியவந்தது, நேகாவும் தவானின் மற்றொரு மனைவி என்று. இதனைத்தொடர்ந்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த தவான், தனது மனைவியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். நான் மூன்று திருமணங்கள் மட்டும்தான் செய்துள்ளேன். எனது மனைவி நான் விளையாட்டாகக் கூறியதை தீவிரமாக எடுத்துக்கொண்டார். எனது முதல் மனைவி மூலம் எனக்கு 3 மூன்று குழந்தைகள் உள்ளனர் என பொலிசில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, எழுத்துப்பூர்வமாக அந்தப் பெண் புகார் தெரிவித்ததை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறோம் என கூறியுள்ளார்.