Vinthai Admin

Vinthai Admin
11076 POSTS 0 COMMENTS
செகோர்..   சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கிணற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல்வெளி பக்கம் சென்றபோது அந்தச் சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக சிறுமியை அருகில் இருந்த...
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருகிறது ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம். இங்கு முதுகலை முதலாம் ஆண்டு படித்துவரும் 26 வயது மாணவர் ஒருவர், இன்று காலை 4 மணியளவில் விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். விடுதியின் காவலர், தனது பணியில் ஈடுபட்டிருந்தபோது, தரையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக போலீசார், ஐஐடி நிர்வாகம், மாணவர்கள் உள்பட அனைவருக்கும்...
கேரளா... கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரா பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி. அதேபகுதியில் இயங்கி வரும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ஆண் நண்பர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் நன்றாக பழகி வந்த ஆண் நண்பர், ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி ஏமாற்றி கடத்தி சென்று உள்ளார். இது குறித்து சிறுமியின்...
நாகப்பட்டினம்..... நாகப்பட்டினத்தை அடுத்த பாப்பாக்கோவில், திடீர்நகர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை செயலாளரும் ஆட்டோ ஓட்டுநருமான இவருக்கு அனுசுயா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ஜனவரி 14-ம் தேதி பொங்கல் அன்று அதிகாலை ராஜ்குமார் உடல் கருகிய நிலையில் அவரது மாமியார் வீட்டின் முன்பு இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று...
ஈரோடு... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள குமரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி வீட்டில் இருக்கும் போது மாத்திரை ஒன்றைச் சாப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரின் அந்த இது குறித்து கேட்டுள்ளார். இதற்கு மாணவி, 'என்னால் சரியாகப் படிக்க முடியவில்லை. ஞாபகமறதி அதிகம் இருக்கிறது.எனக்கு வாழ பிடிக்கவில்லை' என கூறிக்கொண்டிருக்கும் போதே வீட்டில் இருந்து மண்ணெண்ணையை...
விருதுநகர்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவர் கோயம்புத்தூர் பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் கொத்தங்குளம் பகுதியிலுள்ள தங்கை முறை கொண்ட உறவுகார பெண் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் நவீன்குமார் மீது...
விவகாரத்து.... தமிழ் திரையுலகின் பிரபல தனுஷ், தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்வதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் திரைப்படங்கள் தவிர இந்தி படங்களிலும் நடித்து உள்ளார். ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்து உள்ளார். தற்போது தமிழில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமான ஜஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: எதிர்பார்ப்பவையில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்ற குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய...
கோவை... கோவையில் ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோவை வடவள்ளி அடுத்த காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஓட்டுனர் சுதாகரன். இவருக்கும் பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய சுதாகரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த...
கோவை... அன்னூர் அருகே மனைவியை உல்லாசத்திற்கு அனுப்பிவை என்றதால் தொழிலாளியின் தலையில் கல்லைபோட்டு கொன்றேன் என கைதான அவரது நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள உருமாண்ட கவுண்டன் புதூரை சேர்ந்தவர் நடராஜ் (56). ஆடு மேய்க்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் நடராஜ் படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடராஜ்...