அவள் என் அருகில்! மேடையில் வைத்து கண்ணீர் சிந்திய நடிகை ஸ்ரீதேவியின் கணவர்!!

652

IIFA 2018 விருது வழங்கும் விழா தாய்லாந்தில் நடைபெற்றது.இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மறைந்துபோன நடிகை ஸ்ரீதேவிக்கு மாம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இதனை அவரது கணவர் போனிகபூர் பெற்றுக்கொண்டார். விருதினை பெற்றுக்கொண்ட பின்னர், ஸ்ரீதேவி இறந்துவிட்டதை என்னால் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவளை இழக்கிறேன்.

இன்னும் அவள் என் அருகில் தான் இருக்கிறான் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. ஸ்ரீதேவிக்கு கொடுத்த உங்களது ஆதரவினை அவளது மகள் ஜான்விக்கும் தாருங்கள் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.இவரின் இந்த பேச்சு விருது விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.