ஆற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர்… நடுங்கவைக்கும் சம்பவத்தின் பின்னணி!!

337

இந்தியா……..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 12 பேர் ஆற்றில் மூழ்கிய நிலையில், ஆறு பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மூவர் காப்பாற்றப்பட்டு, மேலும் மூவருக்கான தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடுங்கவைக்கும் இந்த சம்பவமானது அயோத்தியாவின் குப்தர்கட்டில் சரயூ ஆற்றில் நடந்துள்ளது. குளிக்க முயன்ற ஒரு குடும்பமே விபத்தில் சிக்கி தத்தளித்துள்ளது.

15 பேர்கள் கொண்ட குடும்பம் ஒன்று ஆக்ராவில் இருந்து அயோத்தியா காணும் பொருட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், சிலர் குளிப்பதற்காக சரயூ ஆற்றில் இறங்கிய நிலையில், திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 12 பேரையும் இழுத்துச் சென்றுள்ளது.

இதில் மூவரை துரிதமாக செயல்பட்ட அப்பகுதி மக்கள் காப்பாற்றியுள்ளனர். மாயமான மூவருக்காக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.