இந்து பெண்ணை காதலித்த இஸ்லாமிய இளைஞர் படுகொலை: அதிர்ச்சி சம்பவம்!

544

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து பெண்ணை காதலித்த இஸ்லாமிய இளைஞரை பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் கடத்தி சென்று அடித்து கொன்றுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.இப்பகுதியில் உள்ள இந்து குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை இஸ்லாமியரான சைஃப் அலி கான்(22) காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய வரவே அவசர அவசரமாக குறித்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.திருமணத்திற்கு 2 வாரங்கள் உள்ள நிலையில் கடந்த செவ்வாய் அன்று குறித்த இளைஞரை கடத்தி சென்ற பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் கொடூரமாக தாக்கி குற்றுயிராக கழிவு நீர் ஓடையில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

பொலிஸ் உதவியுடன் அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் சைஃப் அலி கான் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே சைஃப் அலி கானின் தந்தை, குறித்த காதல் விவகாரம் குறித்து மகனிடம் அறிவுரை கூறியதாகவும், பின்னர் இந்த உறவு தேவையில்லை எனக் கூறி எச்சரித்ததாகவும் ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிந்த பின்னர் சைஃப் அலி கான் பெண்ணின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மட்டுமின்றி பெண்ணின் தந்தைக்கு பல முறை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கொலை விவகாரம் தொடர்பில் பெண்ணின் தந்தை விஜய், உறவினர் விஜேந்திரா ஆகியோரை கடந்த வியாழன் அன்று கொலை குற்றம் தொடர்பாக பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே குறித்த இளம்பெண்ணை கடத்திச் சென்று விற்றுவிட முயற்சி மேற்கொள்வதாக அவரது தந்தையின் பேரில் பெண்ணின் தாயாரே புகார் ஒன்றை பொலிசாருக்கு புகார் அளித்து பின்னர் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார்.தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.