உடலில் அம்பு பாய்ந்து பரிதாப நிலையில் சுற்றித் திரியும் மான்கள் : அதிர்ச்சி புகைப்படங்கள்!

574

அமெரிக்காவில் உடலில் அம்பு பாய்ந்த நிலையில் மான்கள் சுற்றித் திரிவதால், இந்த செயலை செய்தவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவின் Oregon பகுதி பொலிஸ் அதிகாரிகள் சமீபத்தில் சமூகவலைத்தளமான பேஸ்புக் பக்கத்தில் மான் தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து இந்த செயல்களை செய்த நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 2,600 டொலர் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, southwest Oregon பகுதியில் இரண்டு மான்கள் தங்கள் உடல்களில் அம்புகள் பாய்ந்த நிலையில் தடுமாறி நடந்து சென்றுள்ளன. இதைக் கண்ட வனவிலங்கு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மான்களை பிடித்து அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு அதிகாரிகள் முயன்ற போதிலும் ஒரு மானை மட்டும் பிடித்து சிகிச்சை அளித்துவிட்டதாகவும், மற்றொரு மானை பிடிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் மான்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பாதிப்புகள் இல்லை எனவும், இந்த இரக்கமற்ற செயலை செய்த நபர் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.