உடல் பருமனை குறைக்க லேகியம் சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!

677

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த பிரதீப் என்ற 27 வயது இளைஞர், தான் 100கிலோ உடல் எடையுள்ளதை நினைத்து வருந்தியுள்ளார். இதனால் உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் மேற்கொண்டும் குறைக்க முடியாமல் போனது.

இந்நிலையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று, வாகனத்தில் லேகியம் விற்பனை செய்துள்ளதை அறிந்து வாங்கி சென்றுள்ளார். முறையான அங்கீகாரம் பெறாமல் வாகனத்தில் விற்ற லேகியத்தை சாப்பிட்ட பிரதீப்பிற்க்கு திடீரென கடும் வயிற்றுவலியால் துடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தனியார் மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளித்தபின் வீடு திரும்பியுள்ளார். மேலும் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது வயிற்றுவலி அதிகமாக இருந்ததால் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.