எத்தனை நாள் தான் டைரக்டர் சொல்வதையே கேட்பது: புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி!!

521

இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார் அரவிந்த்சாமி. ரோஜா, பாம்பே போன்ற படங்களில் நடித்து ரசிகைகளின் மனங்களை கொள்ளை கொண்ட அரவிந்த் சாமி சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் நடிக்க வந்த அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்கிறார்.

அரவிந்த்சாமி பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் ரொம்பவே தாமதமாக ரிலீஸானாலும் அரவிந்த்சாமிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் அவரின் நடிப்பை பாராட்டித் தள்ளுகிறார்கள். செக்கச் சிவந்த வானம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் அரவிந்த்சாமி.

தற்போது மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இயக்கம் கை நிறைய படங்கள் வைத்திருக்கும் அரவிந்த்சாமி இயக்குனர் அவதாரம் எடுக்க முடிவு செய்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார்.

மணிரத்னத்தின் மனம் கவர்ந்த ஹீரோக்களில் ஒருவரான அரவிந்த்சாமி தனது படத்தில் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. படக்குழு குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படுமாம்.