நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக இருந்த 29 செண்ட் நிலத்தை உறுப்பினர்கள் அனுமதியின்றி சரத் குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் கடந்த 2006ம் ஆண்டு முறைகேடாக விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் மீது நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் புகார் கொடுத்தார்.
ஆனால் விஷால் குற்றம் சாட்டிய நான்கு பேர் மீது ம் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விஷால் ஜகோர்ட்டை நாடினார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நடிகர் சரத்குமார், ராதாரவி மற்றும் இதில் சமபந்தப்பட்ட நான்ன்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து சரத்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றப்பிரிவு பொலிசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.