சிறுமி பாலியல் பலாத்காரம்: குற்றவாளிகளை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்!!

671

வடகிழக்கு இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் சிறுமியை பலாத்காரம் செய்த 2 இளைஞர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு இந்தியாவில் உள்ள Yingkiong கிராமத்திலேயே இந்த அதிர்ச்சி சமபவம் நடந்துள்ளது.

குறித்த கிராமத்தில் உள்ள 17 வயது பெண்ணை இரண்டு இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

தகவலறிந்த கிராம மக்கள் குறித்த இளைஞர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்ட கிராம மக்கள், அவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி Yingkiong தெருவில் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தில் இளைஞர்கள் இருவரையும் ஒப்ப்டைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுடன் குற்றவாளிகளில் ஒரு இளைஞர் சமூக வலைதளத்தில் நட்பு வட்டத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இளம்பெண் அவரை நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் தமது 3 நண்பர்களுடன் இணைந்து குறித்த பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் 2 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் எஞ்சிய இருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.