தமிழ்மக்களின் பாசம் தன்னை வியக்க வைக்கிறது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
2018 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்நிலையில் தமிழக மக்களின் அன்பு குறித்து டுவிட்டரில் ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் என்னை வியக்கவைக்கிறது.
தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் என்னை வியக்கவைக்கிறது உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஏற்று கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே .இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்
அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே, இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்.
நான் சரியானவன் அல்ல. சில நேரங்களில் முட்டாள் தனமான செய்திகளும் சொல்வது உண்டு.
என்னை விரும்பினாலும் வெறுத்தாலும் நான் ஒரு சத்தியம் செய்கிறேன் நான் உங்களை விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.