தெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும் யோகமாம்!!

1131

வாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.

வாஸ்து சாஸ்திரங்களின் படி, ஒரு மனையின் நான்கு திசை மற்றும் அதன் நான்கு மூலைகளுக்கும் ஒவ்வோரு அதிபதிகள் ஆட்சி புரிகிறார்கள்.

அதாவது வட கிழக்குக்கு ஈசான்யம், தென் கிழக்குக்கு அக்னிதேவன், வட மேற்குக்கு வாயுதேவன், தென் மேற்கில் நிருதிதேவன் ஆவார்.

முறையான வாஸ்து சாஸ்திரப்படி வீட்டு மனைகள் அமையவில்லையெனில், வடக்கு, கிழக்கு மனைகளில் வசிப்பவர்களுக்கு காரணமில்லாத பல பிரச்னைகளோடு வாழ்வார்கள்.

ஆனால் நாம் வாழும் வீடு சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.

வாஸ்துப்படி, அமைந்த தெற்குப் பார்த்த மனைகளில் வசிப்பவர்களுக்குப் பணம் மிதம் மிஞ்சி கொட்டுமாம்.

அதற்கு காரணம் தெற்கு மனையை ‘ஐஸ்வர்ய மனை’ என்று சொல்வார்கள். வாஸ்துப்படி ஐஸ்வர்யம் என்பது, வற்றாத செல்வ வளத்தை குறிக்கும்.

தெற்கு திசை எந்த ராசிக்கு யோகம்?

வீட்டு மனையானது தெற்கு திசையை நோக்கி இருந்தால், அது ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்மம் ஆகிய ராசியினருக்கு யோகமுள்ள மனையாக அமையும்.