நடிக்க வரும்முன் சத்யராஜ் இந்த வேலை தான் செய்துகொண்டிருந்தாரா! பலருக்கும் தெரியாத தகவல்!!

557

ஆரம்ப காலத்தில் சிறு வேடங்களில் நடித்து பின் ஹீரோவாகி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். பாகுபலி படம் அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது.

இந்நிலையில் சத்யராஜ் நடிக்க வருவதற்கு என்ன வேலை செய்துகொண்டிருந்தார் என நடிகர் சிவகுமார் நேற்று நடந்த ஒரு விழாவில் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் சென்னையில் தரைதட்டிய கப்பலை உடைத்து பழைய இரும்புக்கு விற்கும் காண்ட்ராக்ட் எடுத்து செய்துள்ளார். பின்னர் ஒரு முக்கிய இடத்தில் ஐஸ்கிரீம் பார்லர் வைத்து நடத்தி வந்துள்ளார்.அந்த இடத்தில் இருந்தவர் தான் தற்போது உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்த்துள்ளார்.