பள்ளி முடிந்ததும் அம்மாவுடன் டீ கடையில் வேலைசெய்யும் இளம் நடிகர்?

499

சினிமாவில் நிறைய நடிகர்கள் சாதனை செய்வார்கள். அதில் ஒருசிலரின் உண்மையான வாழ்க்கை பற்றி கேட்கும் போது நமக்கு அதிர்ச்சி அளிக்கும்.அப்படி பள்ளி முடிந்ததும் தன் அம்மாவின் டீ கடையில் பணிபுரிந்து வருகிறார் துல்கர் சல்மானின் பராவா படத்தில் நடித்த நடிகர் கோவிந்த்.

பராவா படத்தின் இயக்குனர் சௌபிநிக்கா எதர்சையாக ஒரு கடையில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது கோவிந்த் மிதிவண்டியில் வந்து நிற்கும் போது கீழே தவறி விழுந்திருக்கிறார். உடனே போய் அவருக்கு உதவி செய்த சௌபிநிக்கா நீ படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டுள்ளார். அப்படி தான் கோவிந்திற்கு பராவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.

10ம் வகுப்பு படிக்கும் போது பள்ளி முடிந்ததும் நேராக தன் அம்மாவின் டீ கடைக்கு வந்து அவருக்கு உதவுவாராம். 11 மணிவரை பணிபுரிந்துவிட்டு இரவு வீட்டிற்கு போய் தான் பள்ளி வேலைகள் செய்வாராம். இதனை கோவிந்தின் அம்மா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.