பாலியல் தொழிலில் ஈடுபட்ட வாணி ராணி சீரியல் நடிகை கைது : பல நடிகைகளும் சிக்கினர்!!

1474

பிரபல சின்னத்திரை நடிகையான சங்கீதாவை பொலிசார் பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் பாலியல் தொழில் நடப்பதாக சென்னை பாலியல் தொழில் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், வாணி ராணி புகழ் பிரபல சின்னத்திரை நடிகையான சங்கீதா இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சோதனையின் போது நடிகைகள் பலர் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.