பிரித்தானியாவில் சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி இளம்பெண்ணை கொன்ற தம்பதி!!

658

குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்கு வந்த இளம்பெண்ணை சூனியக்காரி என்று கூறி கொலை செய்து எரித்த பிரான்ஸ் நாட்டுத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் Sophie Lionnet. லண்டனில் Sabrina Kouider மற்றும் Ouissem Medouni என்னும் தம்பதியினரின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்கு சேர்ந்தார்.

தனது முன்னாள் காதலனுடன் மந்திர சக்தி உதவியால் தொடர்பிலிருப்பதாக குற்றம் சுமத்தி Sophieயை அந்த தம்பதியினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

அடி உதையால் Sophieயின் மார்பெலும்பு, விலா எலும்புகள் மற்றும் தாடை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. சரியாக உணவு கொடுக்காமல், அடித்து, உதைத்து, பாலியல் வன்கொடுமை செய்து விடுவதாக மிரட்டி அந்தப் பெண்ணை சித்திரவதை செய்துள்ளனர்.

ஒரு நாள் சொல்வதற்கு நாவு கூசும் அளவிற்கு கொடுமைகள் புரிந்த பின் Sophieயை தோட்டத்தில் வைத்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர் அந்த தம்பதியர். பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண் பிணம் எரியும் வாடை அடிப்பது கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்திருக்கிறார். பொலிசார் வந்து பார்க்கும்போது எரிந்துபோன நிலைமையில் இருந்த எலும்புகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

Sabrina Kouider மற்றும் Ouissem Medouni ஆகிய இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் அந்த தம்பதி Sophie மீது கூறும் குற்றச்சாட்டுகள் நடைமுறைக்கு ஒவ்வாததாகவும் நம்ப இயலாதவையாகவும் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sophieயைக் கொல்வதற்குமுன் அந்த ஈவிரக்கமில்லாத தம்பதி தங்கள் மொபைல் போனில் அவரை எடுத்த வீடியோக்கள் விசாரணைக்கு உதவியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விசாரணையின்போது Sophieயின் பெற்றோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.