புகழின் உச்சியில் இருந்து எயிட்ஸின் உச்சகட்டத்தில் துடிதுடித்து உயிரிழந்த நடிகை இவரா? உலகை உலுக்கிய பிரபலங்களின் மரணம்!!

1564

மனிதனுக்கான மதிப்பு என்பது அவனிடம் புகழ், பணம், ஆதாயம் இருக்கும் வரை தான். இவை யாவும் இழந்த பிறகு தான் தன்னை சுற்றி இருப்பவர்கள் எதற்காக பழகினார்கள், யார் உண்மையானவர்கள் என்பதை ஒரு மனிதனால் உணர முடியும்.

உதவிக்கு இல்லை என்றாலும் கூட ஆறுதலுக்காகவாவது நல்ல சொந்தங்கள் நம்மை சுற்றி இருக்க வேண்டும். பணம், புகழை தாண்டி ஒரு மனிதன் முக்கியமாக சம்பாதிக்க வேண்டியது இதுதான்.

இதை பெரும்பாலானோர் தனது மரண படுக்கையில் தான் அறிகிறார்கள்.சினிமாவில் பெரும் புகழும், பெயரும் கொண்டிருந்த இவர்கள்… இறக்கும் போது மிகவும் மோசமாக இருந்தவர்கள். இறுதி நாட்களில் இவர்களில் சிலருக்கு பணமும், சிலருக்கு உறவும் நெருக்கடியாக அமைந்தன.குறிப்பாக கீழே குறிப்பிட்டுள்ள நடிகர்களின் மரணம் உலகை உலுக்கி எடுத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

ராமி ரெட்டி!அம்மன் திரைப்படம் முதல் பல ஆன்மீக மற்றும் பேய் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக திகழ்ந்தவர் ராமி ரெட்டி.

இவர் 90களில் இந்திய சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக கருதப்பட்டவர். ஏறத்தாழ பல இந்திய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ராமி ரெட்டி.

இவர் கல்லீரல் பாதிப்பால் நீண்ட நாளாக பாதிக்கப்பட்டிருந்தார். ராமி ரெட்டி கடந்த 2011 ஏப்ரல் மாதம் 14 நாள் காலை 11.30 மணியளவில் மரணம் அடைந்தார்.

தனது உடல்நல கோளாறுகள் காரணமாக தனது கடைசி காலத்தில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு உருவம் மாறி காணப்பட்டார் ராமி ரெட்டி.

நிஷா நூர்:1980களில் தென்னிந்திய சினிமா துறையில் பிரபலமான நடிகையாக வலம்வந்தவர் நிஷா. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமலுடன் எல்லாம் ஜோடி சேர்ந்து படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சில பாலிவுட் படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் ஒருவரால் ஏமாற்றப்பட்டதால் நிஷா விபச்சார தொழிலுக்கு தள்ளப்பட்டார். இதனால், திரை துறையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார் நிஷா.

பின்னாட்களில் இவரது நிலை கொஞ்சம், கொஞ்சமாக மோசமானது. ஒரு சமயத்தில் தெருவோரத்தில் கிடந்தார். பிறகு இவரை அருகே இருந்த மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போதுதான்.

இவர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அறியவந்தது. அது முற்றி எயட்சாக மாற, 2007ம் ஆண்டு மரணம் அடைந்தார் நிஷா நூர்.

அச்லா சச்தேவ்!2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டு சமயலறையில் கால் தவறி கீழே விழுந்தார் அச்லா. இதனால் இவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மேலும், இதன் பிறகு பலமுறை இவரது மூலையில் இரத்தக்கட்டு அல்லது காற்று வீக்கம் எனப்படும் பிரச்சனைகள் ஏற்பட்டது.

இதற்காக பலமுறை இவர் Embolisms எனும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக இவருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டது மற்றும் கண்பார்வை பறிபோனது.


அச்லாவிற்கு இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டதை குறித்து பாலிவுட் பிரபலங்களை தொலைப்பேசி மூலம்தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர் இவரது குடும்பத்தார்.ஆனால், ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை என்று அச்லாவின் குடும்ப நண்பர் ராஜீவ் நந்தா கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வசித்து வரும் இவரது மகனும், மும்பையில் வசித்து வரும் இவரது மகளும் கூட இவரை பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இவர் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் நாள் மரணம் அடைந்தார்.