சிறுமி ஒருவர்……
சிறுமி ஒருவர் புலியை வாக்கிங் அழைத்துகொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக செல்லபிராணிகளான நாய், ஆடு, மாடு, கோழி என இவைகளை வளர்ப்பதை பார்த்திருப்போம்.
அதிலும் சிலர் தினமும் காலை, மாலை என நாயை வாக்கிங் கூட்டிச்செல்வதை வாடிக்கையாகவே வைத்திருப்பார்கள்.
இந்த நிலையில், சிறுமி நாயை வாக்கிங் கூட்டிச்செல்வது போல், புலிக் குட்டியை வாக்கிங் கூட்டிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மெக்சிகோவில் உள்ள குவாசேவ் என்ற பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், வீட்டில் நாய், பூனை வளர்ப்பது போன்று புலிக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.
இதையடுத்து, புலிக்குட்டியின் கழுத்தில் கயிறு மற்றும் பெல்ட் அணிவித்து அதனை வாக்கிங் அழைத்து சென்றது சாலையில் சென்றவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
மேலும், இதை காரில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
En #Guasave #Sinaloa esta niña fue captada por un automovilista, cuando paseaba un tigre por la calle. Solo en México…????♂️ pic.twitter.com/lfPqE5a12O
— Juan Rivas (@Rivas_Juan) October 12, 2020