பொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா : மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!!

543

சரியான புளுகுனியாக இருக்கிறாரே என்று மில்க் நடிகையை பற்றி பேசுகிறார்கள். மில்க் நடிகை தனது வாழ்வில் நடந்த அந்த துயர சம்பவத்திற்கு பிறகு தான் உண்டு, வேலை உண்டு என்று இருக்கிறார். ஆனால் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

இந்த கவர்ச்சி எல்லாம் தேவையா என்று அவ்வப்போது விமர்சனம் எழுகிறது. கவர்ச்சியாக உடை அணிவது அவரது உரிமை. அதை பற்றி நாம் எதுவும் கூற முடியாது.

மில்க் நடிகை பொழுதூர சமூக வலைதளங்களில் தான் உள்ளார். அவ்வப்போது ட்வீட்டுவது, போஸ்ட் போடுவது, தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது என்று ஆன்லைனில் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நான் சமூக வலைதளங்கள் பக்கம் அடிக்கடி போவது இல்லை, எப்போதாவது தான் செல்வேன் என்று நடிகை கூறியுள்ளார். இதை கேட்ட நெட்டிசன்களோ அப்படி என்றால் அடிக்கடி போஸ்ட் போடுவது யாரு அட்மினா. யாரும்மா அந்த அட்மின் என்று கேட்கிறார்கள்.

நடிகை மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, கவலையாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவிட்டு இப்படி ரீல் விடுகிறாரே என்கிறார்கள் நெட்டிசன்கள்.

அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு தாழ்ப்பாள் போட்ட கவுன் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் ஏகப்பட்ட மீம்ஸ் போட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.