மகனின் இறுதி சடங்கு நடந்த சில மணிநேரத்தில் உயிரை விட்ட தாய்!!

486

உயிரை விட்ட தாய்

நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தனது மகனை பறிகொடுத்த தாய் அந்த இழப்பின் வலியை தாங்கிகொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15 ஆம் திகதி நடந்த துப்பாக்கிசூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் 38 வயதான Kamel Darwish என்பரும் உயிரிழந்தார். இவரது இறுதிசடங்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனது மகனின் இறுதி சடங்கு நடந்த சில மணிநேரத்தில் தாய் Saud Adwan மனவேதனையில் உயிரிழந்துள்ளார்.

ஜோர்டானில் இருந்து கடந்த 6 மாதத்துக்கு முன்னர்தான் Kamel Darwish தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்ட்சர்ச் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இவரது சகோதரர் 2007 ஆம் ஆண்டில் இருந்து அங்கு வசிப்பதால், இங்கு நன்றாக வாழலாம் என அறிவுரை வழங்கியதன் பேரில் அதனை கேட்டு Kamel Darwish அங்கு சென்றுள்ளார்.

இறந்துபோன இவரது இறுதிசடங்கு Linwood இல் நடைபெற்றது. ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவரது தாய் Saud Adwan, மகன் இறந்த வேதனையை தாங்கிகொள்ள முடியாமல் இறுதி சடங்கு நடந்த சில மணிநேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை ஜோர்டான் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.