மீண்டும் குழந்தையாக பிறக்கும் 14 ஆண்டுக்கு முன் இறந்த பெண்: ஸ்கேனில் தெரிந்த ஆச்சரியம்!!

617

பிரித்தானியாவில் கற்பமாக இருக்கும் பெண் ஒருவரின் வயிற்றில் இறந்த பாட்டி தெரிந்ததால், குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.பிரித்தானியாவின் Merseyside பகுதியில் உள்ள Knowsley கிராமத்தைச் சேர்ந்த தம்பதி Michael-Stephanie Jackson.

Michael திருமணம் செய்வதற்கு முன் கருத்தடை செய்திருந்தார், திருமணத்திற்கு பின் குழந்தை வேண்டும் என்பதால் மீண்டும் அதற்குரிய சிகிச்சைகள் எல்லாம் மேற்கொண்டு வந்தார்.

இருப்பினும் Michael-ஆல் குழந்தை கொடுப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் Stephanie மிகுந்த வருத்ததில் இருந்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு இறந்து போன தன்னுடைய பாட்டியின் இடத்திற்கு சென்ற Stephanie தன் பாட்டியிடம் தனக்கு குழந்தை வேண்டும் என்று கூறி கவலைப்பட்டுள்ளார்.

இறந்து 14-ஆண்டுகள் ஆகியும் பாட்டியின் மீது மிகுந்த பாசம் கொண்டதால், அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு Stephanie கஷ்டமாக இருக்கும் சமயத்தில் சென்று வருவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் Stephanie சமீபத்தில் கர்ப்பமடைந்தார். 18-வாரங்கள் கடந்த நிலையில் குழந்தை வயிற்றின் உள்ளே எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது ஸ்கேனில் குழந்தை உருவத்திற்கு பக்கத்தில் ஏதோ ஒரு மனிததலை போன்று தெரிந்துள்ளது. அதைக் கண்ட Stephanie-யின் தாய் இது பார்ப்பதற்கு இறந்து போன பாட்டி போன்று தெரிகிறது என்று கூறியுள்ளார்.

அதன் பின் அவர் உன்னிப்பாக பார்த்த போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். ஆம் இது பாட்டி தான் அவர் தான் எனக்கு குழந்தையாக பிறக்கவுள்ளார், குழந்தை பிறப்பதற்கு சாத்தியமில்லை என்ற போது நான் பாட்டியிடம் அழுத காரணத்தினால் அவரே எனக்கு குழந்தையாக வரவுள்ளார் என்று கூறியுள்ளார்.