ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட நபர்… காணொளியால் நபருக்கு கிடைத்த !!

236

டெல்லி……..

டெல்லியில் நபர் ஒருவர் தனது காணொளிக்கு அதிகமான பார்வையாளர்கள் வேண்டும் என்பதற்காக ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்டுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு யூடியூபர்கள் தங்களது சேனல்களில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

யூடியூபில் வீடியோக்களை ட்ரெண்டாக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக பலவித வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நிலையில், பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பறக்கும் நாய் என்ற தலைப்பில் யூடியூப்பில் வீடியோ ஒன்றினை நபர் வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில், நாயை ஹீலியம் பலூனில் கட்டி கட்டடங்களுக்கு மத்தியில் பறக்க விட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, நாயை வதை செய்வதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நபரை தற்போது பொ.லி.சா.ர் கை.து செ.ய்.துள்ள நிலையில், தன்னுடைய காணொளி யார் ம.ன.தையாவது பு.ண்.படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று குறித்த நபர் தெரிவித்துள்ளார்.